Sunday, October 26, 2014

ஆட்சி மாறும் , காட்சி மாறும், மனசாட்சியும் மாறும்

ஆட்சி மாறும் , காட்சி மாறும், மனசாட்சியும் மாறும்
இந்தியப் பிரதமர்  நரேந்திர மோதியும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட்டும், இரவோடு இரவாக ஒரு யுரேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருக்கின்றனர்.
உலக அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம், யுரேனியம் வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில், இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, இதுவரை அதற்கு மறுப்புத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் பங்கேற்பதை தடுத்துவிடும் என்றும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்றும் ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சி கருத்ஹ்டுத் தெரிவித்துள்ளது.
அமைதிக்காக மட்டும் யுரேனியத்தை பயன்படுத்துவோம் என்று இந்தியா உறுதியளித்ததை தொடர்ந்து யுரேனியத்தை வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் அண்ட்ரூ ரொப் கூறியிருக்கிறார்.
எல்லாம் சரி முன்பு ஒரு காலத்தில் ( மே 1998)  இந்தியா அணு சக்தி சோதனை செய்த போது இந்தியாவில் இருந்த தனது தூதர் ரொப் லாரியைத் திருப்பி அழைத்த ஆஸ்திரேலியா எங்கே?அப்போது இருந்த தெற்காசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனம் காணாமல் போனது எப்படி?


No comments:

Post a Comment