சென்னை
போற்றுதும் ! சென்னையை போற்றுதும் !!
என்னை வளர்த்த சென்னை எனக்கு
இன்னொரு தாய்.
இத்தனை கல்விக்கும்
முதலான கல்வியைத் தந்த
தந்தை.
வேலையை நேர்த்தியாகச்
செய்யக் கற்று தந்த சகோதரி.
பொறுப்புடன் மணம்
முடித்து வைத்த சகோதரன்.
பிள்ளைப்பேறு
பார்த்த செவிலி.
இன்னும்
நான் காதலிக்கும் காதலன்.
என்றும்
என் மனதுடன் பிணைந்து கிடக்கும் கணவன்.
நான் கற்றதை திருப்பித் தர
நினைக்கும் பிள்ளை.
ஸ்ரீலங்கா முதல்
சிட்னி வரையிலான என் நெடிய பயணத்தில்
சென்னை என் முதல்
கல். மைல் கல்.
கடந்து போன இருபத்தைந்து
நாடுகளில்
இன்றும் நெஞ்சோடும்
நினைவோடும் நிற்கும் நிலம்.
நாடுகள் தாண்டி
போகும் போதெல்லாம்
தங்கிடத் தேடும்
நிழற்குடை.
சென்னை
போற்றுதும் ! சென்னையை போற்றுதும் !!
சென்னை நாளில்
சென்னை என்னும் அன்னையை போற்றுதும்!!!
No comments:
Post a Comment