Sunday, January 19, 2014

பொங்கல் விழா படிக்க தமிழ் அவுஸ்திரேலியன்

பொங்கல் விழா
உழவர் திருநாள்
தை மாத முதல் நாளில்  பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் தமிழர் திருநாளாக போற்றப் படும் பெரு விழாவாகும்.. ’உழவுக்கும் தொழிற்கும் வந்தனை செய்வோம்’ பாரதி வாக்கிற்கு வடிவம் தரும் நாள் இது,

பொங்கல் என்றால் பொங்கி  வழிதல் என்ப பொருள் படும். பொங்கல்  நான்கு நாட்கள் கொண்டாடப் படும். அவை
·         போகி
·         பொங்கல்
·         மாட்டுப் பொங்கல்
·         காணும் பொங்கல்  ஆகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று , வயலில் கதிர்த்த பயிர்கள் அறுவடையைக் குறித்து அவற்றை விளைத்த உழவர்களைப் போற்றும்  முகமாக பொங்கல் உழவர் திரு நாளாகப் புகழுடையது ஆகும்.
அறுவடைக்கு காரணமான இயற்கைக்கும், அதற்காகப் பயன் பட்ட உழவு மாடுகள், வீட்டில் உள்ள பால் தரும் பசுக்கள்  மற்றும் கலப்பை போன்ற கருவிகள் அனைத்தையும் வணங்கும் திருநாள் பொங்கலாகும்.
’ஒளியின்றி இவ்வுலகு இல்லை’ என்பது அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உலகம் போற்றும் உண்மையாகும். அந்த ஒளியினை வழங்கிய சூரியனுக்கு நன்றி கூறும் தினம் பொங்கல்  தினமாகும்.  அன்று சூரியனுக்கு பொங்கல் படைத்து மகிழ்வர்.
சூரியனுக்குப் பொங்கல்
வயலில் விளைந்த அரிசியை புதுப்பானையில் இட்டு  கருப்பம் சாறு,  , பசுவின் மடி சுமந்த பால்,  நெய்,  மழையில் நிறைந்த நீர் , இப்படி இயற்கையின் கூறுகளை இணைத்து சுவையான பொங்கலைப் படைப்பர். வீட்டு முற்றத்தில் அழகான  கோலம் இட்டு அதன் நடுவில் புது மண் பானையை  வைப்பர். . புதிய பானைக்கு புதியமஞ்சளைக் காப்பாக அணிவர். பொங்கல் பொன்கி வரும் போது மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று கூறி சூரியனுக்கு முதல் படைப்பை தருவார்கள்.புதிய காய்கறிகளையும் சமைத்து தலை வாழையிலையில் படைப்பர். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்டு வணங்குவார்கள்.
போகி
பொங்கலுக்கு முதல் நாள் தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளாகும். அன்று 'பழையன கழித்து, புதியன புகுத்லும்’ என்ற  பழக்கமாக பழையவற்றையும், உபயோகமற்றவையும் கழிந்து போகி கொண்டாடி மகிழ்வர்.இதற்கு காரணம் பூச்சி களையும் நோக்கமே ஆகும். மனதில் உள்ள  தீய எண்ணங்களும், தவறான உணர்வுகளூம்  நீக்கப்படவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். "போக்கி' என்ற சொல் ம்ஃஅருவி போகி என்றானதாகவும் சொல்வார்கள்.

மாட்டுப் பொங்கல்
தைப்பொங்கல் நாளின் மறுநாள்  மாட்டுப் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படும் வழக்கமாகும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு ஆவினம் வணங்கப்படும். உழவுக்கும், பால் தரும் பட்டிக்கும் உரிய ஆவினங்களுக்கு நன்றி சொல்வதாகும். மாடுகளி நீராட்டி மாடுகளின் கொம்புகளை சீவி ,  பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் அலங்கரிப்பர்.

காளை பிடிக்கும் வீர விளையாட்டு
தமிழகத்தின்   தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் வீர விளையாட்டு  ஜல்லிக்கட்டு என இந்நாளில் நடைபெறும். வீர சாகசப் போட்டிகள்  பல இடம் பெறும்.

காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா காணும் பொங்கல் ஆகும். கணுப் பண்டிகை என்றும் கன்னிப் பொங்கல் கூறப் படும் இன் நாளில்  உற்றார், உறவினர், சுற்றுலா இடங்கள்   மற்றும் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன நடக்கும்.

வட மாநிலங்களில்  மற்றும் சிங்கள மக்கள் இந்   நாளை  மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் அழைக்கின்றனர்

ராஜ கிரகம்” என்று அழைக்கப்படும் சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும்.  உத்தராயணத்தில் சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தினை(தட்ஷிணாயன தட்ஷிணம் தென் – அயனம் பயணம் )   மாற்றி மீண்டும்  வடக்கு நோக்கி ( உத்தராயணயனம் - உத்தரம்  வடக்கு,  அயனம் பயணம்) - நகரும் மாதமான மகர மாதம் முதலில் வருகிறது. இதன் முதல் நாள், “மகர சங்கராந்தி” என்றும், ‘பொங்கல்’ என்றும் நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. உத்தராயணயனம் -  புண்ணிய காலமாகும். பீஷ்மர் இக்கலம் வரை காத்து இருந்தே இறந்தார் என்கிறது பாரதம்.

தை மாதம் முதல் தேதியான மகர சங்கராந்தி தினத்தன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்படுகிறார்கள் மன்னார்குடி என்ற வைணவத் தலத்தில் சங்கராந்தி முதல் "ஸங்க்ரமண உத்ஸவம்' சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மகர சங்கராந்தியன்றுதான் மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்தது. சபரிமலையில் ஐயப்பனுக்குக்குரிய "மகரஜோதி தரிசனம்' காண்பதும் இந்த புண்ணிய தினத் தன்றேயாகும்.

இலக்கியத்தில் பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்,
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை யும்,
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்,
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்,
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் பாராட்டும் திரு விழா இது.





இரத்தினகிரி வாழும் பாலமுருகன்!

இரத்தினகிரி வாழும் பாலமுருகன்!
சந்திரிகா





முருகன் என்றாலே அழகன் என்று பொருள்.சிவந்த மேனி கொண்ட முருகனை , குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டு அருள் பாலிக்கிறான் என்பது தமிழர் நம்பிக்கைநமது உடலின் உச்சந்த்தலையில் இருஇக்கும் சஹஸ்ரஹாரத்தினி குறிக்கும் முகமாகவே முருகன் மலை உச்சியில் உறைகிறான்.முருகனின் ஆறு முகங்கள் ஆறு சக்கரங்கள் ஆகும்.
  'இச் சிவ பதை இரத்தி வெற்பதனில்
     திகழ் மெய்க் குமரப் பெருமாள்'
எனப் போற்றும் முருகன் பேரொளிப் பிழம்பாக நின்று பக்தர்களைக் காப்பன் என்கிறது இப்பாடல் .

அவன் அருளாட்சி செய்யும் ஆறுபடை வீடுகளைத் தவிர அநேக திருக்கோயில்களில் பக்தர்கள் நலம் காக்க நிற்கிறான்.
    
தமிழ்க்கடவுள் முருகனுக்கு தனி மனிதர் ஒருவர் தன் சொந்த முயற்சியில் திருக்கோயில் கட்டி, குளம் வெட்டி, சேவைகள் புரிந்திருக்கும் அதிசயம் தமிழகத்தில் நடந்துள்ளது.


அமைப்பு
சென்னையிலிருந்து சில மைல்கள் தொலைவில் வேலூருக்கு அண்மையில் அமைந்துள்ளது இரத்தினகிரி. செம்பொன் பவள செவ்வேள் உறையும் திருத்தலம் இரத்தினகிரியில் கீழ் மின்னல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்.

இருபதாண்டுகளுக்கு முன் இத்தலம் இருண்டு கிடந்தது. தெருவை ஒட்டியிருந்த குன்று வேலையற்ற வீண்பொழுது போக்கிகளின் தஞ்சமாக இருந்தது.
   
இன்று விபூதியும், சந்தனமும் மணக்கும் அருள் தலமாக விளங்குகிறது இவ்விடம்.


வரலாறு

தவத்திரு மௌனகுரு சுவாமிகள்
முன்பு முருகன் மழையிலும் வெயிலிலும் வாடி நின்றபோது, மலையேறி வந்த ஒருவர் அங்கு திருவிளக்குகூட எண்ணெயின்றி இருப்பது கண்டு முருகனைச் சாடினாராம். முருகனுக்கு விளக்கு ஏற்ற முடியாத ஆற்றமையால் மயங்கி விழுந்தவர் எழுந்த போது உலகம் மறந்து முருகன் உணர்ந்தவராக விளங்கினார். அந்தச் சாடலே இறுதியாகி அதுவரை உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அந்த மனிதர் மகானாகி விட்டார். அவர் தான் தவத்திரு மௌனகுரு சுவாமிகள். அன்று சிரித்த அதே சிரிப்பு உதட்டிலும் கண்களிலும் நடமாட, சடை விழுந்த முடியும், முகத்தை மறைக்கும் தாடியும், இடையில் ஒற்றைத்துண்டுமாக காட்சியளிக்கிறார்.


இவரது பணியால் திருவிளக்கேற்றவும், பூஜை புனஸ்காரங்களுக்கு வழியின்றியும் அவதிப்பட்ட ஒரு குடிலின் நிழலில் குமரக் கடவுள் குடி கொண்டிருந்தான் அன்று. இன்று மலை மேலே விண் முட்டும் கோபுரங்களும், கர்ப்ப கிருகமும், மலையேற வசதியான படிகளும் மலையடிவாரத்தில் தொண்டு அமைப்புகள், திருமணக் கூடம், பள்ளிக்கூடம், திருக்கோயில் அலுவலகம், மருத்துவமனை, திருக்குளம், பக்தர்கள் தங்கும் குடில்கள் என்று ஒரு குறுங் கிராமமாக இவ்விடம் காட்சியளிக்கிறது.

     இருபது ஆண்டுகளுக்கு முன்பு உடைகளையும் அத்தோடு இல்லற வாழ்க்கையையும் விலக்கி விட்ட இவருக்கு பாலமுருகனடிமை என்றே திருநாமம் வழங்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் நடப்பதில்லை
இங்குள்ள இறைவன் பால முருகன், வேலும் கொடியும் இரு கைகளில் தாங்கி மாறில்லா வள்ளியும், யானை தன் அணங்கும் இரு புறமும் நிற்க முகமெலாம் மலர, பக்தர் மனம் குளிர முருகன் மயில் வாகனனாக உறைகிறான். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.

அவன் அடியவரான பெரியவரோ கண்களில் தீட்சண்யத்துடன் வாய் மௌனித்து அவன் பாதத்தில் வருவோர்க்கெல்லாம் அருள் வாக்கை எழுதி வழங்கி பக்தர் குறை தீர்க்கிறார். இருபதாண்டு கால மௌனத் திரைக்குப்பின் எழுத்தால் இறைவன் வாக்கினை இயம்பி வருகிறார். குறையோடு வருபவரின் கேள்விகளுக்கு கனிவோடு குறிமேடை பதிலை எழுதி விபூதி மணக்க அள்ளித் தருகிறார். முருகனடிமை சொன்னதை முருகனே சொன்னதாகவே சிரமேற் கொண்டு நிறைவோடு திரும்புகின்றனர் மக்கள்.



சன்னதிகள்
உற்சவர் முருகன் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் அமர்ந்திருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் அம்பாளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. வராஹிக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.


திருக்குளம்
ஆறுமுகனின் தீர்த்தத்துக்கு (ஷட்கோண) அறுகோண வடிவில் அமைக்கப்பட்டள்ள திருக்குளத்தின் அழகே அழகு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆறின் மகிமை
இங்குள்ள  முருகனுக்கு பூஜையின்போது  முருகனின் எண்ணான ஆறு என்ற எண்ணிக்கை வருமாறு  மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பப்பாகும்.

அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்குத்தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர்.

அருணகிரியார்  பாடினார்
அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர்'' எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர்


பணிகள்
  இன்று இரத்தினகிரி மலையைச் சுற்றி சுமார் எழுபது இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள குடியிருப்புக்களும், குளமும், அணி கலனும், பொருட்களும், இன்ன பிறவும் நிறைந்துள்ளன.

முருகன் உலவி வர தங்கரதமும், வெள்ளி மயிலும் அலங்காரமாக உள்ளன. ஆண்டு வருமானமாக சுமார் இரண்டரை இலட்சம் வசூலாகி பல திருப்பணிகளுக்காக செவ்வனே செலவிடப்படுகின்றது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்ந்த பெரியவர் மக்கள் வசதிக்காக பல பொதுத் தொண்டுகளை கோயில் பரிபாலனத்துடன் இணைத்து நடத்தி வருகிறார். கல்விப் பணியும், மருத்துவப் பணியும் இதில் குறிப்பிடத்தக்கன.

திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு சுமார் ஆறு லட்ச ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வருகிறது. திருமுருகன் திருமணக்கூடம் புதுமணத் தம்பதிகளுக்கு பெருவாழ்வு அளிக்கிறது. இந்த மருத்துவமனை சிற்றூர்வாசிகளை வாழ வைக்கிறது. நிபுணர்களால் நிர்மானிக்கப்பட்டு பல இலட்ச ரூபாய் செலவில் சத்திர சிகிச்சை வசதியுடனும் பல படுக்கைகளுடனும் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை இங்குள்ள பல கிராமங்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது.

காடாய் கிடந்த ஊரை தன் ஆட்சியின் கீழ் சுபிட்சம் அடையச் செய்ய அருட்கடாட்சத்தினால் ஒருவரை ஆட்கொண்டு அவர் மூலமாக அவ்வூரை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பால முருகன் திருவிளையாடலை என்னவென்பது?