மனோரமா
1200 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப் படைத்த தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு
அழைக்கப்படும் மனோரமா கோபிசாந்தா
என்னும் இயற்பெயர் கொண்டவர். 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி
என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள்
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்
என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு
மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்ற பெருமையுடன் நடித்தவர்.
சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து
உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.1958 இல் , கவிஞர் கண்ணதாசன் மாலையிட்ட மங்கையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். அன்று தொடங்கிய தனது கலை பங்களிப்பிற்காக
2002 இந்திய அரசின்
உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்
தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய
அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா
எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே
விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர்
விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப்
படைத்துள்ளார்.
சபா நாடகக்
குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக்
குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம்
செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை நடிகர் முதல் இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து
கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment