Sunday, October 26, 2014

சிங்களத்தில் திருவாசகம்

சிங்களத்தில் திருவாசகம்

ஆயிரத்து இருநூறு  ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் அருளிய நூல் திருவாசகம்.திருவாசகத்தின் முழுமையான முதலாவது மொழிபெயர்ப்பு 115 ஆண்டுகளுக்கு முன் 1900இல் வெளியானது. மொழிபெயர்த்தவர் ஜி. யூ. போப்பையர். ஆங்கில மொழிபெயர்ப்பு.அந்தப் புத்தகம் 1987 ஆம் ஆண்டு சென்னைப் பலகலைக்கழகத்தில் சுப்பம்மாள் வாங்கிப் படித்தேன்.அன்று முதல் வான் கலந்த மாணிக்க வாசகத் தேன் சுவையில் நான் கலந்தேன்.
திருவாசகம் இந்தியில் பேரா. சுந்தரம் மொழிபெயர்த்து கொல்கத்தா சாந்திநிகேதன் வெளியீடாக 1995இல் நூலானது.மலையாளத்தில் திருவாசகம் திரு. சந்திரசேகரன் நாயர் மொழிபெயர்த்து திருவனந்தபுரம் மன்னர் வெளியிட்டு 2012இல் நூலானது. தெலுங்கில் திருவாசகம் பேராசிரியர்கள் பரிமளம்+அரம்பை மொழிபெயர்த்து 2013இல் திருமலை திருப்பதி தேவத்தானத்தால் நூலானது. கன்னடத்தில் திருவாசகம் பேரா. ஜெயலலிதா மொழிபெயர்த்து 2014இல் நூலானது.வடமொழியில் திருவாசகம் தெரு. ச. கோதண்டராமன் மொழிபெயர்த்துச் சுவாமி தயானந்த சரசுவதி அவர்கள் அச்சிட 2014இல் நூலாது.
சிங்களத்தில் திருவாசகம் திரு. வடிவேல் இராமசாமி, திரு. இலிண்டன், திரு. வே. சண்முகநாதன் (மூவரும் கல்முனை) மொழிபெயர்த்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக் கைலாசபதி அரங்கத்தில் 26.05.2014 அன்று மாண்புமிகு அமைச்சர் வாசுதேவா நாணயக்கார இந்து, புத்த கலாச்சாரப் பேரவையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து  கொள்ளும் போது மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெரும் முயற்சியால் கலாநிதி மோகன். அமைச்சரின் தமிழ்ப்பிரிவுச் செயலாளர்  கலாநிதி மோகன். சொன்னதன் படி வாசுதேவ நாணயகாரவிடம் காண்பிக்கப்பட்டது.
அங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலிய இரத்தின தேரர் இருந்தார். தமிழ்ச் சாகித்தியங்கள் சிங்கள மக்களிடையே முழுமையாகப் போய்ச் சேரவில்லை என வண. அதுரலிய இரத்தின தேரர் உரையில் குறிப்பிட்டார். திருக்குறள் சிங்கள மொழிபெயர்ப்புச் சிங்கள மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளதாகக் கூறினார்.அமைச்சர் வாசுதேவ நாணயக்கராவும் அங்கு இருந்தார்.அமைச்சரிடம் திருவாசகம் சிங்கள மெழிபெயர்ப்பைக் காட்டிய போது  பக்கங்களைப் புரட்டியபின் வண. அதுரலிய இரத்தின தேரரிடம் அமைச்சர் நூலைக் கொடுத்தார்.
திருவாசகம் சிங்கள நூலின் பக்கங்களைப் புரட்டிய தேரர், மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் எழுதிய முன்னுரையைப் படித்தார். பாராட்டினார். "அருமையான இந்த நூலில் எனக்கு ஒரு படி தருவீர்களா" எனக் கேட்டார். மேடையில் வெளியிட்டு வையுங்கள் படியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் சொன்னார்கள். மேலதிகப் படிகள் அச்சிடப் பணமில்லாமல் இருக்கிற  நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அருமையான நூல் சிங்கள மக்களுக்குக் கிடைக்கவேண்டும் எனத் தேரர் கூறினார். அச்சிட்டுத் தரவேண்டிய கடமை அமைச்சருக்கு உள்ளது. "அச்சிட்டுத் தாருங்கள்" என அமைச்சரிடம் தேரர் கேட்டார். அமைச்சரும் மேடையிலேயே அச்சிட ஒப்புக் கொண்டார். அமைச்சர் நூலை வெளியிட்டார், தேரர் பெற்றுக்கொண்டார்.
இப்படித்தான் தொடங்க வேண்டும் நல்லிணக்கம். நன்றி, மறவன் புலவின் நல்மணியே.

பார்த்ததில் ஈர்த்தது
இந்து நூல் வெளியீட்டில் இஸ்லாமிய பேராசிரியர்
மறுபடியும் ஆன்மிகம் தான், இப்போது ’’சிவவாசகம் ’’ மற்றும் ’’பக்திப் பயிர்வளர்த்த பதின்மூவர்’’. நூல் வெளியீடு. இந்த . இரு நூல்களின்  வெளியீட்டு விழா. பூரண கும்ப மரியாதைகளுடன்..திருபனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தர மூர்த்தி சுவாமிகள்...மற்றும் திருச்சிமலைகோட்டை மெளன மடம்..ஸ்ரீமத் குமாராசுவாமி தம்பிரான் சுவாமிகள் வரவேற்கப்பட.அவர்களுடன் இணைந்து வாணியம்பாடி பேராசிரியர். அப்துல் காதர்  இந்து நூலைப் பெறும் மதநல்லிணக்கத்துடன் ஆரம்பித்தது விழா.


திருபனந்தாள் ஸ்ரீகாசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெளியீட..மீனாட்சி கல்விக்குழுமங்களின் தலைவர்..தின இதழ் பத்திரிக்கையின் நிறுவனர் திரு இராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்கள்

மதம் சாதி கடந்து..சைவசமய தொண்டாற்றிய  அரும்பெரும் மக்களின் பெருமை சொல்லும்..பக்திப் பயிர்வளர்த்த பதின் மூவர் நூலை திருச்சி மலைக்கோட்டை மெளனமடம் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட..பேராசிரியர். கவிஞர் அப்துல்காதர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

இனிய இசையுடன்...திருமதி கிரிஜா ஹரிஹரனின் அற்புதக்குரலில்..சிவவாசக பாடல்கள் 8 எடுத்து ஒலியமைத்த..குறுந்தகட்டை....திருச்சி மலைக்கோட்டை மெளன மடம். ஸ்ரீமத் குமராசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட...மீனாட்சி.கல்விகுழும நிறுவனர் திரு இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்கள்

நூலசிரியர் இரா .குமாருக்கு  .’’’இறைத்தமிழ் வேந்தர்’’’..எனும் இன்சொல் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.இவர் தின இதழ் ஆசிரியர், இதழியல் தொடர்பாக நூல் படைத்தவர்.பல ஆண்டு கால பத்திரிகை ஆசிரியர் அனுபவம் பெற்றவர்.


படித்ததில் பிடித்தது

மன்னிக்கவும் படிக்க முடிந்தது. எழுத முடியவில்லை.ஆசிரியரிடம் எவ்வளவு கேட்டும் ஒரு நாள் அவகாசம் தர மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment