Saturday, December 28, 2013

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! 
இவள் மண்டையில் இருப்பது களி மண்ணா?
சுப்பராக ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு அப்போது தான் எழுந்தேன். பக்கத்து வீட்டு மிலன்பென் கையை ஆட்டினாள். ஹாய் என்று நானும் பதிலுக்கு கை ஆட்டினேன். மிலன்பென் என் குஜராத்தி நண்பி.நேரம் கிடைக்கும்  போது கூடிக்கதைப்போம்.

என்ன இன்று வெளியில் போகவில்லையா?”

இல்லை என்று தலையாட்டினேன்.

கோவிலுக்குப் போகலாமா? என்று கேட்டாள்.

சரியென்று சொன்னேன்.

எந்த கோவிலுக்கு என்று கேட்டாள்

எங்கு போகலாமென்றுஎன் பதில் கேள்வி.

வுல்லொங்கொங்கில் ஒரு கோவில் இருக்கிறதாமே அங்கு போகலாமா?” என்றாள்.

அதற்கென்ன போகலாம்.’அங்கு தான் பெருமாள்”’ என்று என் மத அறிவை மடை திறக்கத் தொடங்கினேன்.

என்னை முடிக்க விடவில்லை. “என் நண்பர்கள் எல்லோரும் அங்கு தான் படையெடுப்பார்கள்…..” தொடர்ந்தாள்.

அவ்வளவு பக்தியா? என்று நான் வியந்து முடிக்கும் முன் அவள் சொன்னது.

அங்கு தான் சிட்னிலேயே சிறந்த மசால் தோசை, குறைந்த விலையில் ,நிறைந்த சுவையில் கிடைக்குமாம்.கேள்விப்பட்டிருகிறேன். அந்த சாம்பார் மணக்குமாமே. மத்தியானத்தில் நல்ல சாப்பாடும் கிடைக்குமாம்.”

மிலன்பென் வாயிலிருந்து நயகாரா ஊற்றெடுத்துக் கொண்டு இருந்தது.எனக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.


பெருமாளே! இவள்போல இருப்பவர்கள்  மண்டையில் மசாலா வைக்க மாட்டாயாகோவிலென்பது வழிபாட்டு தலமென்பது மாறி வடைக்கடையாக மறி விட்டதே என்று “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா இவள் மண்டையில் இருப்பது களி மண்ணா? என்று  தலையில் அடித்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment